ஓயாத ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700 கோடி விவகாரம் …!எங்களுக்கு வேண்டும் …!உறுதியாக கூறும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ….!

Default Image

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவி கேரளாவுக்கு விரைவில் கிடைக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை வெள்ளத்துக்கு ரூ.700 கோடி ஐக்கிய அமீரக இளவரசர் வழங்க உள்ளதாக தெரிவித்தார் கேரளா முதல்வர் பினராயி விஜயன்.இந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து நிதியை வாங்க கொள்கையை முன் நிறுத்திய நிலையில் கேரள முதல்வர் அப்படியனால் நீங்களே ரூ.700 கோடி கொடுங்கள் என்றார்.

பின் மத்திய அரசுக்கும்-கேரள முதல்வருக்கும் வார்த்தை போர் நடந்த நிலையில் தற்போது அமீரக இந்திய தூதர் கூறிய தகவல் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 700கோடி அறிவித்த அமீரகத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்து ட்விட் செய்த நிலையில் இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது .பின்னர் இந்தியாவுக்கான ஐக்கிய அமீரக தூதர் அஹ்மத் அல்பன்னா கேரளா வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக 700 கோடி அளிப்பதாக சொல்லவில்லை என இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இது குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவிக்கான அறிவிப்புகள் வருகின்றன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடியை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், அந்த நிதியுதவியைப் பெற மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என நம்புகிறேன். எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவி கேரளாவுக்கு விரைவில் கிடைக்கும் என பினராயி விஜயன் தெரிவித்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்