இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

CENTRAL CABINET MEETING

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்…

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்குவதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதன்படி, இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் இன்னும் சற்று நேரத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்