12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்..!

tn govt

திருவண்ணாமலை, சேலம், தென்காசி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொகுதி பங்கீடு: திமுக, காங்கிரஸ் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை…!

திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியராக இருந்த குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குநராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிசந்திரன் உயர் கல்வித்துறை துணை செயலராகவும், அரசு துணை செயலாளரராக ரவிச்சந்திரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக எம்.லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளன.

அதுபோல வேளாண் சந்தைப்படுத்துதல் வேளாண் துறை ஆணையராக ஜி. பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையாக எஸ்.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்