டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை! அருண் விஜய் பேச்சு!

arun vijay

நடிகர் அருண் விஜய் தன்னனுடைய படங்களில் டூப் இல்லாமல் நடித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில், இவர் சமீபத்தில் நடித்திருந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் கூட சண்டைக்காட்சிகளில் நடித்து கைககளில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக தான் தற்போது அருண் விஜய் தனது கைகளுக்கு கட்டுப்போட்டு கொண்டு இருக்கிறார்.

இருப்பினும் தொடர்ச்சியா தனது படங்களில் பெரும்பாலான காட்சிகளை டூப் இல்லாமல் அவரே செய்து வருகிறார். இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிகட்டுப்போட்டியை பார்க்கவேண்டும் என்று அருண் விஜய் நேரில் கலந்துகொண்டார். அவருடன் இயக்குனர் பா.விஜய்யும் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் மாயாவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

போட்டியை கண்டு கழித்துவிட்டு திரும்பி செல்லும்போது செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் தனக்கு அடுத்ததாக டூப் போடாமல் ஒரு படத்தில் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகர்களின் வீர விளையாட்டை பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த விளையாட்டு கலந்துகொண்ட அணைத்து வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். எனக்கு இந்த மாதிரி கதையம்சம் கொண்ட கதையை தேர்வு செய்யவேண்டும் என ஆசைப்படுகிறேன். அதாவது இந்த மாதிரி கதை கொண்ட ஒரு படத்தில் டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது.  கண்டிப்பாக வரும் நாட்களில் அந்த மாதிரி கதையம்சம் கொண்ட ஒரு படம் வந்தால் நடிப்பேன்”  எனவும் நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay