இரவு நேர தொலைபேசி தொடர்பால் அக்காவின் கழுத்தை நெரித்து கொன்ற தம்பி…!!

Default Image

தானே:
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தன்னுடைய  நண்பருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசியுள்ளார். இவரின் இந்த நடவடிக்கையை குடும்பத்தினர் எச்சரித்தனர்.ஆனாலும் தன்னுடைய நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவதாக இல்லை அந்தமாணவி.அதாவது பிற்பகல் தொடங்கி, இரவு வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
அக்கா இரவு முழுவதும் தெலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பதால் ஆத்திரம் அடைந்த தம்பி அக்காவுடன் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி இறுதியில் கோபம் தலைக்கேறி  அக்காவின் கழுத்தை புடித்து நெரித்துள்ளான். இதில் மூச்சுத் திணறி அக்கா உயிரிழந்துள்ளார்.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த  சிறுவனை கைது செய்தனர்.தொலைபேசி பேசியதால் தம்பியே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்