முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்.பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தினர்.

மேலும், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில்  பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து  முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ரொக்கமாக ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கியது ஏன்..? அரசு விளக்கம்..!

இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கு வரும் 12-ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கோரி  ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தீர்ப்பு வழங்கும் வரை மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், சென்னை நீதிமன்ற அறிவுறுத்தலை மேற்கோள் காட்டி ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனால், ராஜேஸ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பினை  12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்