கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு கை கூப்பி வணங்கி அஞ்சலி..!

சென்னை தீவுதிடலில் வைக்கப்பட்டுள்ள  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு  அஞ்சலி செலுத்த  நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுக்கள்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கை கூப்பி வணங்கி அஞ்சலி  அஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் நிர்மலா சீதாராமன், பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேப்டன் அவர்கள் இறப்பு செய்து கேட்டு பிரதமர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து, நேரடியாக சென்று விஜயகாந்த் குடும்பத்திற்கும், அவரது தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பிரதமர் சார்பில் ஒரு மலர் வளையம் சமர்ப்பித்தேன் என  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்