படம் திரையிட்டு கேரளவுக்காக உண்டியல் வசூலித்த தயாரிப்பாளர்: அடேங்கப்பா என்ன ஒரு மனிதாபிமானம்…!!!

Default Image

சமீபத்தில் வெளி வந்த காட்டு பய சார் இந்த காளி. இதில் ஜெயவந் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஐரா நடித்தார், யுரேகா இயக்கி இருந்தார். இந்த படம் 25 நாட்களை கடந்து ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தயாரிப்பாளர் ஜெயவந், மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில் படத்தை இலவசமாக திரையிட்டார். இது குறித்து ஆட்டோவில் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தார். படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்தார்கள். தியேட்டரின் முன்னால் ஒரு உண்டியல் வைக்கப்பட்டது. படம் பார்க்க வரும் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை அந்த உண்டியலில் செலுத்தலாம் என்றும், அந்த தொகை கேரளா வெல்ல நிவாரணத்துக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்தருந்தார். அதன்படி காட்சி முடிந்ததும் அந்த உண்டியல் பணம், உண்டியலுடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்