தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி..!!

Default Image

தூத்துக்குடி மாவட்டம்  முக்காணி குருவிதுறையை சேர்ந்தவர் தொம்மைசிலுவை மகன் பிரபாகர்(37).  கூலிதொழிலாளியான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற பிரபாகர் மாயமானார். இந்நிலையில் நேற்று காலை தாமிரபரணி ஆற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆற்றில் மூழ்கி இறந்தது பிரபாகர் என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்