ஓக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ..! பணி நியமன ஆணையை வழங்கினார்..!முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!

Default Image

ஓக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக ஓக்கி புயலால் உயிரிழந்த குடும்பங்களில்10 பேருக்கு  பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Image result for oki puyal
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவ. 29-ஆம் தேதி ஒக்கி புயலால் கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக, கன்னியகுமாரி மாவட்டத்தில் இதுவரை கண்டிராத வகையில் விவசாய நிலங்கள், வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Image result for oki puyal
ஒக்கி புயலினால் மரணமடைந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.6 கோடி, காயமடைந்த 20 மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம், கரை திரும்பாத 234 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.11.70 லட்சம், குறைந்த கால மீன்பிடி நிவாரணத் திட்டத்தின் கீழ் 28,643 மீனவ குடும்பங்களுக்கு, தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14.32 கோடி நிவாரணத் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று ஓக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்