2019 நாடளுமன்றத் தேர்தல்..!தேர்தல் ஆணையத்தில் கூடியது..! அனைத்துக் கட்சி கூட்டம்..!!

Default Image

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்துப்  டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
Related image
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் ஆகியவற்றை நடத்துவது குறித்துப் பேசுவதற்காக   தேர்தல் ஆணையம்  அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகள், 51மாநிலக் கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டது.
இந்தக் கூட்டம் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், அரசியல் கட்சிகளின் செலவுக்கு உச்சவரம்பு விதித்தல், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதற்கான கோரிக்கை ஆகியவை பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்