கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி..! முதல்வர் வாழ்த்து..!

கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார்.

இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் 3 இந்திய வீராங்கனை ஆவார். வைஷாலி தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில்,இந்தியாவின் 3வது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி – சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்