விண்ணைத் தாண்டிய தங்கம் விலை..வரலாறு காணாத உயர்வால் அதிர்ச்சியில் பொதுமக்கள்! எவ்வளவு தெரியுமா?

gold

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. வாரத்தின் தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனை ஆனது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் வரலாறு காணாத வகையில், சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் வரலாறு காணாத அளவில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய தங்கம் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் (29.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.82.20க்கும், கிலோ வெள்ளி ரூ.82,200க்கும் விற்பனையாகிறது.

செல்போனுக்காக கொலை செய்யப்பட்ட வட மாநில தொழிலாளி..! நடந்தது என்ன..?

சென்னையில் (28.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,240க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,780க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.81.50க்கும், கிலோ வெள்ளி ரூ.81.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்