79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங்!

NationalSquashChampionship

79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நவ. 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 417 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் அபய் சிங்கை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூட்டினார் தமிழ்நாடு வீரர் வேலவன் செந்தில்குமார்.

ஐபிஎல்லில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்… சிஎஸ்கே அறிவிப்பு ..!

அதாவது, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த அபய் சிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் வேலவன் செந்தில்குமார். இதுபோன்று, தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்று அசத்தியுள்ளார் அனாஹத் சிங்.

சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தன்வி கன்னா மற்றும் அனாஹத் சிங் மோதின. போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தன்வி கன்னா விலகியதால் அனாஹத் சிங் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். தனது 15 வயதில் தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் அனாஹத் சிங்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்