கேரளாவுக்கு ரூ.700 கோடி …!இந்திய அரசு வாங்க வேண்டும் …! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Default Image

இந்தியா வெளிநாடுகளின் நிதியை மறுப்பது குறித்து  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண தொகை தருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.அதேபோல் தாய்லாந்தும் கேரளத்துக்குத் தங்கள் பங்குக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது.
இந்த இரண்டு வெளி நாட்டு நிதிகளையும் இந்திய அரசு வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றது.
மேலும் கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் வருத்தம் தெரிவித்தார்.
Image result for kerala cm
இந்நிலையில் இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும். வெளிநாட்டு நிதியை ஏற்கலாம் என 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் உள்ளது.எனவே 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம்.
மேலும்  கேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26இல் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெரும் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்