கேரளாவிற்கு நிதி வழங்குவதில் சிக்கல் …!இந்தியா வாங்க மறுப்பு …! ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700 கோடி என்னவாகும்?

Default Image

வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு  மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வெளிநாட்டு நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களின் போது சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதில்லை என்பது இந்தியா கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவிற்கு 2,600 கோடி வேண்டும் என இழப்பீட்டு தொகை மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில முதல்வர் பினாராயி விஜயன். ஆனால் மத்திய அரசு 600 கோடி தொகை மட்டுமே அறிவித்தது. இதனிடையே ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு 700 கோடி நிவாரண தொகை தருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.அதேபோல் தாய்லாந்தும் கேரளத்துக்குத் தங்கள் பங்குக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது.
https://twitter.com/Chutintorn_Sam/status/1030868465157136384
தாய்லாந்து கேரளாவுக்கு நிதி வழங்குவதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதர் ட்வீட்டரில் பக்கத்தில் தாய்லாந்துக்கு இதனை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் தாய்லாந்து தூதர் இது குறித்து கூறியிருப்பதாவது, கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை ஏற்க மாட்டோம் என்று இந்தியா அலுவல்பூர்வமற்ற முறையில் எங்களிடம் தெரிவித்து விட்டது” என்று வேதனை  தெரிவித்துள்ளார்.
இதனால் ஐக்கிய அமீரக அரசர் கேரளாவுக்கு 700 கோடி நிவாரண தொகை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்