பூம்ரா சூறாவளியில் சிக்கிய இங்கிலாந்து அணி …!வெற்றியை நோக்கி இந்திய அணி …!

Default Image

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 110-வது ஓவரில் இந்தியா தனது ஆட்டத்தினை டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தது.

இதன் பின்னர் இங்கிலாந்து அணி 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது.இதன் பின்னர் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 102 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பூம்ரா 5,இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக பட்லர் 106,பென் ஸ்டோக்ஸ் 62 ரன்கள் அடித்துள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்