4 ஆண்டுகள் சைக்கிள் வாங்க ஆசையாக சேர்த்த பணம் …!கேரள வெள்ளத்திற்கு நிதிஉதவி …!சிறுமியின் குணத்தை பாராட்டி இலவச சைக்கிள் வழங்கிய நிறுவனம் …!

Default Image

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த  ரூ.8000 பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காகக் கொடுக்க முன்வந்த விழுப்புரம் சிறுமிக்கு  இலவசமாக சைக்கிளை பரிசளிக்க முடிவு செய்தது.
அனுப்பிரியா என்ற குழந்தை விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர்.  சைக்கிள் வாங்குவதற்காக உண்டியல்களில் பணம் சேர்த்து வந்தார்.அனுப்பிரியா 4 ஆண்டுகளாக பணம் சேமித்து வந்த நிலையில் ,வரும்  அக்டோபர் 16ஆம் தேதியன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சைக்கிள்  வாங்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் கேரளா வெள்ளம் குறித்து தொலைக்காட்சி மூலம் அறிந்த சிறுமி, தான் சேமித்த பணத்தை நிவாரண நிதியாக வழங்க விரும்புவதாக தந்தையிடம் ஆசையை தெரிவித்தார். இதை அடுத்து உண்டியல்களில் இருந்த ரூ.8000 பணத்தை சிறுமி தனது தந்தையிடம் ஒப்படைத்தார். வங்கி வரைவோலை மூலம் பணத்தை அனுப்ப சிவசண்முகம் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் சிறுமி அனுப்பிரியாவுக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று  ட்விட்டர் மூலம் அறிவித்தார்.
தற்போது அனுப்பிரியாவை பாராட்டி ஹீரோ நிறுவனம் சைக்கிளை வழங்கியுள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்