கேப்டனுக்கு நடந்தது என்ன?: கண்ணீர் மல்க கலைஞரின் கல்லறை முன்பு….!!!

Default Image

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் சமீபத்தில் காலமானார். அப்போது அமெரிக்காவில் இருந்த விஜயகாந்தால் வரமுடியாததால் வீடியோவில் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த விஜயகாந்த் அதிகாலையில் கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தார். ஆனால் சிகிச்சை பெற்று வருவதால் தள்ளாடியபடியே நடந்தார். கம்பீரமான நடைக்கு சொந்தக்காரரான விஜயகாந்த் இப்படி நடந்தது கொஞ்சம் வருத்தம் தான்.
மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தும் போது குழந்தையை போல கண்ணீர் விட்டு அழுதது காண்போர் மனதை நெகிழ செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்