என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என செயற்குழு கூட்டத்தில் பேச்சை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..!!

Default Image

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என செயற்குழு கூட்டத்தில் பேச்சை தொடங்கினார்  மு.க.ஸ்டாலின்
நீங்கள் அனைவரும் தலைவரை மட்டும் இழந்திருக்கிறீர்கள், நான் மட்டும் தான் தந்தையும் இழந்திருக்கிறேன்  திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே திமுக தலைவர் கருணாநிதியின் ஆசை அவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என கூறி முதல்வரை சந்தித்தேன்.
கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு, முதல்வர் கையைப் பிடித்து கெஞ்சி கேட்டேன்; ஆனால் மறுத்துவிட்டார்கள். கடைசியாக பார்ப்போம் என்று கூறி அனுப்பினார் முதல்வர் என  ஸ்டாலின் உருக்கம். திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் செயற்குழு நடைபெறுவதை எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்