#Breaking : டெல்லி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.! 

Delhi Minister Rajkumar Anand

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி சுங்கத்துறையினர் ஏற்கனவே ஹவாலா பணபரிவார்தனை பற்றி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் மீது ஏற்கனவே புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தனர்.

இந்த ஹவாலா பணப்பரிவர்தனை விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்று அமைச்சர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 8 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை மெயிலுக்கும் ஜார்ஜ் சொரோஸ்க்கு தொடர்பு… அமித் மாளவியா..!

இந்த சோதனையானது மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணப்பரிவர்த்தனை வழக்கு அல்ல என்றும், இது ஹவாலா பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பான சோதனை என்று தான் இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணப்பரிவர்த்தனை வழக்கில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் , அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த சமயத்தில் டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்