சிலை திருட்டு வழக்கு :டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் பயத்தில் முன் ஜாமீன் கோரி மனு…!
டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் நாளை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் தாக்கல் செய்த மனுவின் காரணமாக முதல் கட்ட விசாரணை தொடங்குகிறது.
இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தற்போது டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சென்னை கபாலீஸ்வரர் கோவில் அறங்காவல்குழு தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.