கேரளாவில் கனமழை -வெள்ளம்..!ரூ.5 கோடி நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…!தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயார்..!

Default Image

கேரள மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கேரளா-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பஞ்சாயத்துக்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சப்பரபடவு கப்பிமலை உள்ளிட்ட பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கனமழையால் கொச்சி விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதாக கேரள பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது  தமிழக அரசு கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்