கேரளாவில் கனமழை …!18 பேர் பலி ..!வெள்ளத்தில் மிதக்கும் கொச்சி விமான நிலையம் !
கேரளா-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பஞ்சாயத்துக்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சப்பரபடவு கப்பிமலை உள்ளிட்ட பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.கனமழையால் கொச்சி விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதாக கேரள பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்