கனமழை எதிரொலி…! தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை …!2 நாட்களில் நீர்வரத்து 100000 கனஅடிக்கு மேல் இருக்கும்…!

Default Image

மத்திய நீர்வளத்துறை ஆணையம்  தமிழகத்தின் 6 மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக அளவில் மழை பெய்வதால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அணைகளில் உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
1.25 லட்சம் கனஅடி நீர் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிகமாக மேட்டூர் அணைக்கு நீர்  வந்து கொண்டிருப்பதால் மத்திய நீர்வளத்துறை ஆணையம்  கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியுள்ளது.மேலும்  2 நாட்களுக்குள் மேட்டூருக்கான நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்