எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Edapadi Palanisamy

முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கேசி பழனிசாமி.

இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக போலி உறுப்பினர்கள் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாமிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இபிஎஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கில் கூறிய தகவல் களங்கம் விளைவிப்பதாக கூறி கேசி பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். ஆதாரங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது தவறு என கேசி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது. இதன்பின், அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly