உச்சகட்ட பதற்றம் …!கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் எதிரொலி ..!மருத்துவமனைக்கு படையெடுத்த குடும்பத்தினர் & தொண்டர்கள் ..!போலீஸ் குவிப்பு
காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து மருத்துவமனைக்கு குடும்பத்தினர் வந்துள்ளனர் .
இன்று மாலை(ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருந்தது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.கருணாநிதியின் உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருணாநிதி சிகிச்சைப்பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு அறிக்கையில் கவலைக்கிடம் என்று வெளியானதும் கலைஞரின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.மேலும் பாடலாசிரியர் வைரமுத்து, முத்தரசன், கி.வீரமணி ஆகியோர் சென்றுள்ளனர்.
காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் காவேரி மருத்துவமனை முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.