திமுக தலைவர் கருணாநிதி மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர்!மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

Default Image

மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரித்தார்.
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இதன் பின்னர் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில்,  திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.கருணாநிதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் மிக மூத்த தலைவர்.திமுக தலைவர் கருணாநிதி மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்