திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

Default Image

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .

நேற்று இரவு முதலமைச்சர் பழனிசாமி சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார் .

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் நேராக தனது இல்லத்திற்கு சென்றார்.இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை சென்றார்.அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் சென்றனர்.

பின்னர் காவேரி மருத்துவமனைரயில்  கருணாநிதியின் உடல்நிலை குறித்து  முதல்வரும் துணை முதல்வரும் கேட்டறிந்தனர்.உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சிவி சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர்  இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்