8 வழி சாலைக்கு பூட்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி எங்கையோ போயிட்டீங்க தலைவா
சென்னை-சேலம் இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து அரசாங்கம் அறிவித்தத்தில் இருந்து பல போராட்டங்கள் பலர் கைது என சம்பவங்கள் நடந்து வருகிறது .விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதால் பல விவசாயிங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்டும் என்ற அரசியல் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த தலைவர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர் .
காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது.புதிய சாலை அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனிடையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை – சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டுபோட்டு பூட்டிவிடுவோம்!” என்று மிக மிக அருமையான யோசனையை தெரிவித்துள்ளார் .திண்டுக்கல் பூட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் மகிழ்ச்சி .
Dinasuvadu.com