தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..! எதற்கு..!
காவலர்கள் பணிச்சுமை, ஆடர்லி முறை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மற்ற துறையை விட காவல்துறையினருக்கு பணிப்பழு அதிகமாக இருப்பதாகக் கூறிய நீதிபதி கிருபாகரன், அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கவோ, அல்லது கூடுதல் பணி நாளுக்கு ஊதியம் வழங்கவோ வேண்டும் என்று தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு இணையாக காவல்துறைக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? என கேள்வி இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.