காதல் திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு!

Default Image

மதுரை மாவட்டம் கிளசந்தை பேட்டையை சேர்ந்த பொன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பொன்ராஜ் மீனாவின் தூரத்து உறவினர் என கூறப்படுகிறது. பொன்ராஜ் மீனாவின் வீட்டில் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் மீனாவின் சகோதரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

மீனாவின் சகோதரர்கள் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சென்று திருமணம் செய்து கொண்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த மீனாவின் அடைந்த சகோதரர்கள் இருவர் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பொன்ராஜை சரமாரியாக வெட்டினர்.

அதை தடுக்க சென்ற மீனாவிற்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இதனை அடுத்து இருவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர்.அதன் பின் மதுரை தெப்பகுளம் காவல் நிலையத்தில் மீனாவின் சகோதரர் உட்பட 3 பேர் சரணடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்