மகாராஷ்டிராவில் விவசாயகள் நூதனமுறையில் போராட்டம் நடத்தினர்..!
இந்தியாவில் GST வந்ததில் இருந்து பல பொருட்களின் விலை ஏறியது. அதில் குறிப்பாக மகாராஷ்டிராவில் மானியம் அல்லாமல் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பொருளுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்றும், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரியும் மும்பை பால் பண்ணை விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்வாபிமணி சேத்கரி சங்கத்னா என்ற விவசாய அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் குழந்தைகளுக்கு பாலை இலவசமாக வழங்கினர். மேலும் சாலையில் எருமைகளை பாலில் குளிப்பாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதொரு நூதன போராட்டமாகும்.