ஜே.சி.திவாகர் ரெட்டி அதிரடி அறிவிப்பு..!

Default Image

இந்தியாவில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது,இந்த ஆட்சியில் மக்களுக்கு பெரும் பாதிப்பு வந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரம் பின்னுக்கு சென்றுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படியில் வாக்களிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்கப் போவதில்லை என தெலுங்கு தேச கட்சி எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அக்கட்சியின் எம்பியான ஜே.சி. திவாகர் ரெட்டி நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாம் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

ஆந்திராவில் ஆட்சி நடத்தும் தெலுங்குதேச அரசு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான நம்பிக்கையை உடைக்கும் வகையில் மத்திய அரசு இரண்டின் மீதுமே தாம் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக தம் மீது குற்றச்சாட்டு வந்தாலும் அதனைத் தாம் பொருட்படுத்தப் போவதில்லை எனவும் ஜே.சி.திவாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்