வக்கீல் பெருமக்களின் மனசாட்சியை நன்றியோடு வணங்குகிறேன் : விவேக்..!

Default Image

சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11பேரையும் கைது செய்தது.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் போலீசார் கைதான 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தியது.

இதைதொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா வழக்கில் கைதான 17 பேருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது .

இதற்க்கு நடிகர் விவேக் வக்கீல் பெருமக்களின் மனசாட்சியை நன்றியோடு வணங்குகிறேன் என்று தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்