ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் நேரில் சென்று விசாரணை! நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  ஆணையம்

Default Image

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனையில் வரும் 29 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்த  நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  ஆணையம் முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு விசாரணைகளை பலரிடம் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனையில் வரும் 29 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்த  நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  ஆணையம் முடிவு செய்துள்ளதுவருகின்ற  29 ஆம் தேதி மாலை 7 மணி 45 நிமிடங்கள் ஆய்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.  ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  ஆணையம் .

முன்னதாக கடந்த ஜூன் 15 ஆம் தேதி  அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர்  ஆய்வு செய்வதாக அறிவித்து அனுமதி மறுக்கப்பட்டதால் ஆய்வை ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்