சிக்கலில் சிக்கிய கிரிக்கெட் வீரர் : தகாத உறவால் 5 குழந்தைகள் : புலம்பும் மனைவி..!
பாகிஸ்தானின் அரசியல்வாதி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்எனும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் தான் இம்ரான் கான். மேலும் பாக்கித்தான் அமைச்சரவையில் இருந்துள்ளார்.இவர் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுமார் இருபது ஆண்டுகாலம் இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணி சார்பாக ஆடிய இம்ரான் கான் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ஆவர்.
இவருக்கு தகாத உறவின் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாக அவரது முன்னாள் மனைவி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்ரான் கான், வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் 2-வது மணம் முடித்து விவாகரத்து செய்து விட்ட ரெஹம் கான் (Reham Khan), தனது பெயரிலேயே சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தில் இவரை பற்றிய பல கருத்துக்கள் உள்ளன.
அதில், இம்ரான்கானுடனான 10 மாத இல்வாழ்க்கை குறித்தும் எழுதியுள்ளார். அதன்படி, இம்ரான்கான் ஏராளமான பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதன் மூலம் பிறந்த 5 குழந்தைகளில் சிலர் இந்திய பெண்களுக்கு பிறந்தவர்கள் என்றும் ரெஹம் கான் கூறியுள்ளார்.