இன்று பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் ஆகும்.
நா.முத்துக்குமார் 1975 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தில் பிறந்தார்.
நா.முத்துக்குமார் முதலில் இயக்குனராகத்தான் ஆசைப்பட்டார்.ஆனால் அவர் சில காரணங்களால் பாடலாசிரியரானர்.இவரது முதல் படம் வீர நடை ஆகும் .கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) உட்பட சில படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.
மேலும் தங்கமீன்கள் மற்றும் சைவம் படத்திற்க்காக தேசிய விருதுகளும் வென்றுள்ளார்.
பின்னர் நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.