கூகுள் நிறுவனத்தால் 1.2 கோடி ரூபாய் சம்பளத்திற்கு தேர்வான இந்திய மாணவர்!

Default Image

கர்நாடகாவில் படித்த  மாணவர் ஒருவர் உலகில் புகழ்பெற்ற நிறுவனமான கூகுளில் வேலை பார்க்க தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.

மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞர் ஆதித்யா பலிவர் ஆவார்.பெங்களூருவில் உள்ள  இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷனல் டெக்னாலஜி (IIT-B) Integrated M.Tech  படிப்பை 5 ஆண்டுகள் படித்தார்.இவர் 2013 -2018 ஆண்டு படிப்பை படித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி குறித்த தேர்வு ஒன்றை கூகுள் நிறுவனம் நடத்தியது.சுமார் 6000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகம் முழுவதுமிலிருந்து  கலந்து கொண்டனர்.இந்த தேர்வில் சிறப்பாக செயல்பட்ட 50 மாணவர்கள் கூகுள் நிறுவனத்தில் ஒருவருடம் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர் .அந்த 50 மாணவர்களில் ஒருவர்தான் ஆதித்யா பலிவர்.அவர் தேர்வானதால் அவருக்கு சரியாக ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

கூகுள் நிறுவனத்தில்  வரும் 16 ஆம் தேதி ஆதித்யா பலிவர் வேலையில் சேர உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்