தூத்துகுடியா .? இல்லை சாத்துக்குடியா.? : ஸ்டாலின் கேள்வி..!

Default Image

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

மத்திய, மாநில அரசுகள் , தமிழகத்தின் அழிவிற்கு காரணமாக உள்ளதாகவும், அழிவை ஏற்படுத்திடும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தின் மீது திணிப்பதாகவும் கூறினார். நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் , பசுமை சாலை , காவிரி மேலாண்மை வாரியம் என பல கூட்டங்களை அடுக்காக அடுக்கினார் ஸ்டாலின்.

மேலும் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாகவும் மத்திய, மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இப்பொது எந்த பிரச்சனையும் குறித்து பேசமுடியவில்லை. எது பேசினாலும் குற்றமே. குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து இன்று வரை நன் சட்டமன்றத்தில் நான் பேச முயற்சிசெய்கிறேன்,என்னை பேசவிடாமல் தடுக்கின்றனர்.

தூத்துக்குடி என்ற என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை. தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்றே சொல்லவா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்