இன்னும் சில நிமிடங்களில் தூத்துக்குடி மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவு!இன்னும் சிறிது நேரத்தில் விசாரணை!
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்னும் சிறிது நேரத்தில் விசாரிக்கப்படுகிறது.
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.
மேலும் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.
பின்னர் ஜூலை 3 ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.இந்த விசாரணை இன்னும் சிறிது நேரத்தில் இந்த விசாரணை தொடங்கவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.