நாள் ஒன்றுக்கு 2000 ஆயிரம் கோடி இழப்பீடு!90 லட்சம் லாரிகள் நாடு முழுவதும் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம்!

Default Image

ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தலைமையில்  நேற்று நாமக்கல்லில் வைத்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இதில் பல மாவட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் பேசிய அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, சுங்கச்சாவடி 3ஆம் நபர் காப்பீடு கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும்.இதி இந்தியா முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும்,தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் பங்கேற்கின்றது.இதனால் ஒரு நாளைக்கு சுமார்  2000 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படும் என்றார் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்தரண் சிங்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்