அய்யோ பாவம் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிய நயன்தாரா ..!
‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் முதன்முறையாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் நயன்தாரா அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜய்சேதுபதி, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் கொலைகள் செய்வதை காதலிக்கும் சைக்கோ வில்லனாக வலம் வரும் அனுராக் காஷ்யப் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறார். இவரை பிடிக்க வரும் சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்துள்ளார். ஜோதிகாவின் நாச்சியார் பட வசனம் போன்று ஆங்கிலத்தில் பேசி வில்லனை வெளுத்து வாங்கும் நயன்தாரா இறுதியில் சைக்கோ வில்லனை பிடித்தாரா என்பது கதையாக இருக்கக்கூடும் என படத்தின் முன்னோட்டத்தை பார்க்கையில் தெரிகிறது.
அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தையை காப்பாற்றும் ஆட்சியராக வலம் வந்த நயன்தாரா தற்போது சைக்கோ கொலைகாரனிடம் போராடி வருகிறார். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.