வங்கிகளுக்கு அறிவுரை!கடன்கொடுக்காமல் இருப்பது நல்லது!சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

சென்னை உயர்நீதிமன்றம் கடனை திருப்பி செலுத்தும் தகுதி இல்லாதவர்களுக்கு கடன்கொடுக்காமல் இருப்பது நல்லது என வங்கிகளுக்கு  அறிவுரை வழங்கியுள்ளது.

தீபிகா என்ற மாணவி  நாகையைச் சேர்ந்தவர் ஆவர்.தமக்கு செவிலியர் படிப்புக்கான கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கி நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், மனுதாரரின் தந்தை ஏற்கெனவே பல முறை கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும், செவிலியர் படிப்பு கல்விக்கடன் திட்ட வரம்புக்குள் வராது எனவும் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதி வைத்தியநாதன் இதைக் கேட்ட பின், அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக பலநபருக்கு வங்கிகள் கடன் வழங்கிய பின், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதால், அப்பாவி வங்கி ஊழியர்கள்தான் கடைசியில் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்தார்.

கடனை வசூலிக்க வங்கிகள் கடன்பெற்றோரின் பின்னால்  ஓடுவதை விடுத்து, தகுதி இல்லாதவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதே நல்லது என அறிவுறுத்தினார். இதையடுத்து, தந்தை பல கடன்களை செலுத்தாத நிலையில் மகளின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே என மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்