தனிப்பட்ட நலனுக்கானது அல்ல பசுமை வழிச்சாலை திட்டம்! அமைச்சர் ஜெயக்குமார்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பசுமை வழிச்சாலை திட்டம் தனிப்பட்ட நலனுக்கானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக எம்.பி. கனிமொழி பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், பொதுமக்களுக்காகவே சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.