ஆய்வறிக்கையில் திடுக் தகவல்!18 லட்சம் பெண்கள் புதிய சட்டத்தால் வேலை இழக்கும் அபாயம்!
ஓர் ஆய்வறிக்கையில் மத்திய அரசின் புதிய மகப்பேறு சட்டத்தால், நாட்டில் 18 லட்சம் பெண்கள் வேலையை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டீம்லீஸ் சர்வீசஸ்’ நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு கால விடுமுறையை 26 வாரங்களாக அதிகரிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. முன்பு, இந்த விடுமுறை காலம் 12 வாரங்களாக இருந்தது. அதிகமான விடுமுறை ஏற்படுத்தும் நஷ்டத்தால், பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்காலத்தில் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, அடுத்த நிதியாண்டுக்குள், சிறுதொழில்கள் உட்பட 10 துறைகளில் பணிபுரியும் சுமார் 18 லட்சம் பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கக் கூடும். மேலும், இச்சட்டத்தின் காரணமாக, பெண்களை பணிக்கு அமர்த்துவதை நிறுவனங்கள் தவிர்க்கும் நிலை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.