ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விமர்சையாக நடைபெற்ற மாங்கனித் திருவிழா!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித் திருவிழாவில் மாங்கனிகளை இறைத்து சிவபெருமானை வழிபட்டனர். அறுபத்து 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் சிவபெருமான்மீது கொண்ட பக்தியை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நேற்று பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி உலா வந்தார். அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். வீடுகளில் இருந்து வீசப்பட்ட மாங்கனிகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் பிடித்து எடுத்துச் சென்றனர்.