கார் விபத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி உயிரிழப்பு!

Default Image

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய அதிகாரி  சென்னையில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

செவ்வாய்கிழமை இரவு  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான விஸ்வநாதன் வீட்டருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த தமது காரை எடுத்து வாகன நிறுத்தும் இடத்தில் விடுவதற்காக முயற்சித்துள்ளார். இதற்காக காரில் அமர்ந்து அதனை பின்னோக்கி இயக்கும்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் வீட்டின் சுற்றுச்சுவரில் சென்று மோதியது. இதில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி விஸ்வநாதன் உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்