திருமணச் சான்றிதழ் பாஸ்போர்ட் பெற தேவையில்லை!வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ,இனி வரும் நாட்களில் பாஸ்போட்டுக்கு விண்ணிப்பிக்கும்போது, திருமணச் சான்றிதழ் தேவைப்பாடாது என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், திருமணமானவர்களும், விவாகரத்து ஆன பெண்களும், இந்த சான்றிதழ் விவகாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக, தன்னிடம் கவலையுடன் புகார் அளித்ததாக கூறியிருக்கிறார்.
இதன் அடிப்படையிலேயே,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, திருமணம் ஆனவரா அல்லது ஆகாதவரா என்ற கேள்விக்கு ஆதாரமாக, திருமணச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றாக கைவிட முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே, இனிவரும் காலங்களில், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, திருமணச் சான்றிதழ் தேவையில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார்…