மாதத்திற்கு இரு முறை ரயில்களில் போர்வையை சலவை செய்ய நடவடிக்கை!

Default Image

ரயில்வே துறை,ரயில்களில் ஏசி வகுப்பில் பயணிகள் பயன்படுத்தும் போர்வையை மாதத்திற்கு இரு முறை சலவை செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதற்கு முன்பு போர்வையை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சலவை செய்யப்பட்டு வந்த நிலை மாற்றப்பட உள்ளது. மேலும் சலவை செய்வதற்கு எளிமையாக இருக்கும்  வகையில் கம்பளி மற்றும் நைலான் கலந்து தயாரிக்கப்பட்ட போர்வையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பதில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதுடன் விலையும் ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பயணிகளுக்கு ஒவ்வொரு முறையும் சலவை செய்யப்பட்ட போர்வையை வழங்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏசி வகுப்பில் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாள்தோறும் 3 லட்சத்து 90 ஆயிரம் போர்வைகள் வழங்கப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்